-ந.மயூரரூபன்
என்னிலத்து வெளியில் நடக்கிறேன்
புன்னகையில் தொற்றியிருக்கும்
பரிச்சயங்களின் முகம்
ஆழப்புதைந்திருக்க
சாவீடு முடிந்த மௌனப்படபடப்பு
எங்கும் நெளிந்தலைந்து விரிகிறது...
அந்நியனாய்த் தெரியும் என்முகம்
வீதி முனைகளிலெல்லாம் ஒளிந்துகொள்கிறது...
முகமற்று எனது வெளியெங்கும்
நடந்தலைகிறேன்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக