திங்கள், 7 ஜூன், 2010

அலைவு

-ந.மயூரரூபன்


என்னிலத்து வெளியில் நடக்கிறேன்
புன்னகையில் தொற்றியிருக்கும்
பரிச்சயங்களின் முகம்
ஆழப்புதைந்திருக்க
சாவீடு முடிந்த மௌனப்படபடப்பு
எங்கும் நெளிந்தலைந்து விரிகிறது...
அந்நியனாய்த் தெரியும் என்முகம்
வீதி முனைகளிலெல்லாம் ஒளிந்துகொள்கிறது...
முகமற்று எனது வெளியெங்கும்
நடந்தலைகிறேன்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக