வெள்ளி, 18 ஜூன், 2010

குளங்கள் ஊறுகின்றன


--ந.மயூரரூபன்

ஓரம்பிடித்து இழுக்கிறேன்
 நினைவுகளின் செவ்வலியெலாம்
வந்துவிழுகிறது
எனக்குள் ஊறும் இந்தக்குளத்தின்
இரகசியங்களெல்லாம்
விழிமுன் ஒளிக்கும்
ஓரங்களில் படுத்திருக்கிறது.

வந்தணையும் எனக்கான சொற்கள்
செங்களியழைந்து ஊர்கிறது
என்மொழிபிணைந்து
மடை கரைந்தவெண்ணத்துள் சரிகிறது.

இரும்புருளைத் துண்டுகள்
தீயுருக்குக் குண்டுகள்
பெருக்கியிறைத்த செங்களியும்

வளைந்துயிர் அரக்கிய
நினைவு மறுகும் எரிதடங்களும்

உன்னிண வாடை
குவிந்துறையும்வெண்திரைக்குள்
திணிந்து மடங்காதெழும் எப்போதும்.

என்குளம் பெருகும்
காலங்களைச் சபிக்காதே.
பிணச்சீலையெரியும்
எங்களின் கனவுகளைப்பின்ன
இன்னமும் ஓரங்களை இழுக்கிறேன்.

நண்பனே!
உன்முன்னேயும் கண்டுகொள்
நிணவாடை வீசும் ஓரங்களை.
உன்குளமும் காத்திருக்கிறது...





கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக