-ந.மயூரரூபன்
களைத்து விழுந்திருக்கும்
வெளிச்சத்தினலைவுகள்
கோழையாய்த் தீய்ந்து போகிறதிங்கு.
சித்திரங் கரிந்த நிலத்துள்
தீக்குணந் தின்னும்
கருங்காட்டு வெளியில்
சஞ்சலமறுந்துபோய்ப் படுத்திருக்கிறேன்.
என்னுடல் தின்னுங்குறி
கருங்காட்டு இருள் சப்புகிறது.
அது துப்பிய வெளியில்
அச்சம்பெருக்கும் இருள்மரம்
வளர்ந்தோங்குகிறது.
உயிருரிந்த பின்னும்
இச்சையுறிஞ்சும் உன்குறியால்
களைத்து விழுந்த
வெளிச்சத்தினுடல் புணரப் புணர
விழுந்து கொண்டேயிருக்கிறது இருள்.
08102010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக