செவ்வாய், 15 ஜூன், 2010

சித்து

-ந.மயூரரூபன்


அசையும் காற்றிலுடைந்து பரவும்
நீருந்தியெழும் பறவையின் சாரலாய்
என்னுலவு கணங்களின்
வனத்தாளுடைந்து கொள்கிறது.
சிறுபறவைகளின் குலாவுகுரல்
நுழைந்தென்னுள் வழிகிறது

என்னுள் பெருகுமுன்னால்
என்னுதிரா வண்ணம்
சுடரேறி விண்ணளைகிறது.
வண்ணவான் படைக்கவெனை
உந்துமுன்னால் இறைகிறதென்னுள்
இம்மை பெருக்கும் சித்து.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக