திங்கள், 14 ஜூன், 2010

பதற்றம்

-ந.மயூரரூபன்


காற்றுள் குழையும் இருள்
ஈரமாய்த் தன்னுயிர் விரித்து
என் கனவுவெளி மூடிப்பின்னுகிறது
பகல்களற்ற பொழுதுக்குள்
விழுந்து கொண்டிருக்கும்
நினைவுகளின் சொட்டுகள்
மெதுவாய் என்னுயிர் கரைக்க
அழுதலையும் இராக்குருவியின்
பதற்றம் தொற்றித் தொடருகிறதெங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக