வெள்ளி, 11 ஜூன், 2010

விடைத்தலையும் காந்தல்

-ந.மயூரரூபன்


சுற்றிச் சடையும் காந்தல்
தகரத் தடுப்பேறி உடல் வெம்ப
என்னுயிர் விழுங்கிப் படுத்திருக்கிறது - பின்
வயிற்றுள் விடைத்து நெடுக்கிறது.

நினைவுகளின் பசுந்தழல் பொசுங்கும்
தீங்கனவே காற்றுக்கும் தெரிந்திருக்கிறது.
எட்டநின்று தன்சுவடெறிந்து
உயிரழையக் காத்திருக்கும் நாயொன்றின்
மூச்செறிவு மட்டும் முளைக்கிறது.

பசியைக் குதறக்காத்திருக்கும்
குறியொன்றின் நிழல் நிலநடுவில்
நின்று நெடுத்தலைகிறது.
உயிரழையக் காத்திருக்கும்
மூச்செறிவுகளின் வெம்மை
ஊர்ந்தேறுகிறது எங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக