புதன், 19 மே, 2010

நினைவு


-ந.மயூரரூபன்


மெதுவாய் அசையும் நிலவு
ஈரமாய் மனதிலுறைந்து
நினைவுகளை உரசும் மெல்ல மெல்ல...

நதியோரம் உயிர்களறுந்து
சிதைந்தலறிக் கிடந்தபோதும்
நதியலையில் ஆடிச் சென்றாய் நீ.
பார்க்க யாருமின்றி மிதக்கும் வழியில்
எம்மோலத்தை விசிற மறந்து காவிச் சென்றாய்...

இன்றும் பாரமாய்... தளர்வாய்
மிதந்துவரும் உன்னிழல்
ஓலங்களை இறக்கிச் செல்கிறது
தன்னிச்சையாய் என்னுள்...

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக