-ந.மயூரரூபன்
எனக்குள் இறங்கும்
வர்ணங்களைக் காணவும்
அது தரும் யௌவனம் வீசும்வெளிகளில்
என்மூச்சின் கதகதப்பினையும்
காண்பதற்காய் தொடரும் நண்பர்களே!
மனதின் ஓரம் இழுப்புண்டு போகும்
சாத்தானின் உயிர்ப்பினையே
எனது உயிரின் முனைகள் கண்டுகொள்கின்றன.
இருளை விசிறிச் செல்லும் ஆண்டவனின் எதிரி
என் நிலமெங்கும்
எங்களின் ஓலத்தையும் விதைத்துச் செல்கிறான்.
சாத்தானின் இருளைத் தொடர்ந்து
கண்ணீரைச் சேர்க்கக்காத்திருக்கும் நண்பர்களே!
ஓல வெளிகளில் பிய்ந்துபோகும்
என் மனவெளிகளில்
ஆண்டவனின் உயிர்ப்பினைத் தேடுகிறேன்...
உங்கள் மனதிலிருந்து
சிறிது சிறிதாய் அதற்கானஒளியைத் தாருங்கள்.
05052010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக