வியாழன், 3 மார்ச், 2011

எங்கள் கதவு

-ந.மயூரரூபன்

மறைவு தருமந்தக் கதவு
பழையதாய்ப் போனது.
பழுமரத்தின் மறைவில்
சகலமுமொடுங்கிய உந்நிழலில்
தோயும் கணங்களை நிறைத்தே
களைத்துப்போனது.

மறைப்பின் கதவுகளையே
என்னால் கண்ணிறை தின்றும்
அடையமுடிகிறது.

மூடமுடியா வெளியது
என் கனவைத்துரத்தி
செத்துப்போகிறது.
கனவின் கொய்ததலை மட்டும்
கதவை அடிக்கடி முட்டுகிறது.

இருள் முளைக்கும் வெளிக்குள்
என் கனவைத்தேட
கதவைத் திறக்கிறேன்...
வெளியிலிருந்து அதை மூடுகிறாய் நீ.

களைப்பற்று இருவரும் காத்திருக்கிறோம்
கதவில் எங்கள் முகங்களைப் பொருத்தியபடி.
.

030320112200

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக