திங்கள், 28 பிப்ரவரி, 2011

அதே சாயல்

-ந.மயூரரூபன்

பரிதியில் ஊரும்
எனக்கான சாயல்களை
பாழடையும் மையங்களிலிருந்தே
நீ வரைகிறாய்.
உனது மையத்திலிருந்து நீளுமாரை
தேகங்களைத் தின்றும்
ஆன்மாக்களைப் புணர்ந்தும்
வட்டங்களை வரைகின்றன.
காலந்தோறும் பரப்புக்குறையா
வட்டங்கள் புனைய
உன்னாலேயே சாத்தியமாகிறது.
நீ நம்பும் தோற்றங்களெல்லாம்
பாழடைந்த மையத்தின்
பொய்மையுள் நனைந்தபடி
அந்த ஒற்றையாரையைப் பின்னுகின்றன.
மீண்டும் மீண்டும் என்னை எழுதவே
உன்னெண்ணப் பொட்டுக்கள் குவிகின்றன.
உனதாரை
இப்பொழுதும் அவர்களால்
யுகந்தோறும் மெய்ப்பிக்கமுயலும்
அதே சாயல்களையே வரையமுடிகிறது.

280220111550

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக