செவ்வாய், 8 மார்ச், 2011

தீ வரையும் நீ

-ந.மயூரரூபன் 

தீக்கங்குகள் அடருமாசை
நீருக்குள்ளும் சூடாய்த் தழுவுகிறது.
நான் மூழ்கிய வெளியில்
தீயினீரமே மணக்கிறது.
காற்றறும் பொழுதுக்காய்
காத்திருக்கும் கணமொன்றில்
தீயில் மிதக்கும் என்னை எழுதுகிறேன்.
ஒவ்வொரு எழுத்துக்களும்
காற்றள்ளிச் செல்லும்
கிடங்குள் குவிந்து
கருமையுள் கரைந்து போகின்றன.
நீ கவர்ந்த
தீ தோய்ந்த என்னெழுத்துக்களை
உன்னுள் பத்திரப்படுத்து - அது
உன்னை வரையும் துயரங்கள்.
காற்றுக்கொளிந்த உன்னினைவுகளே
நான் நனைந்தெரியும் வெளியில் மிதக்கின்றன.

080320112305

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக