
-ந.மயூரரூபன்
வாய்ப்புப் பார்த்திருக்கும் தெருவில்
எனது காலடிகளைத்தேடி
ஓர் நினைப்பு இறங்கியலைகிறது
என்னைத் தவிர்த்து.
விழிகள் மயங்கும்
பொழுதுகள் ஒவ்வொன்றிலும்
நினைவைக் களைந்து
திகைத்திருக்கும் எனக்குள்
நுழைந்து சுருண்டுகொள்கிறது
என் நினைவு தின்ற அத்தெரு.
நான் நடந்தலையும் வெளியில்
மெதுவாய்த் தெரு
சரிந்திறங்கியதை
கண்டவர்கள் யாருமில்லை....
வெளியெங்கும்
பழமையின் வீச்சமாய்
என் கனவுகள் மட்டும்
படிந்திருப்பதைக் கண்டதாய்ப்
பேசிக்கொண்டார்கள் எல்லோரும்.
07042010
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக