-ந.மயூரரூபன்
அது ஆனந்த சயனம்
அண்டசராசரமும்
கனவுகளின் மிதப்பில்
கரைந்துகொண்டிருக்கும்
கவலைகள் தேடிவருவதும்
காலங்கள் துரத்துவதும்
கண்களின் இமைகளில்
தடைப்பட்டுவிடும்
இமையிறுக்கிப் பால்குடிக்கும்
பூனைக்கெங்கே தெரியும்,
வானத்தின் முகடெங்கும்
விழிகள் முளைத்திருப்பது?
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக