திங்கள், 5 ஏப்ரல், 2010

மிதப்பு


-ந.மயூரரூபன்


அது ஆனந்த சயனம்
அண்டசராசரமும்
கனவுகளின் மிதப்பில்
கரைந்துகொண்டிருக்கும்

கவலைகள் தேடிவருவதும்
காலங்கள் துரத்துவதும்
கண்களின் இமைகளில்
தடைப்பட்டுவிடும்

இமையிறுக்கிப் பால்குடிக்கும்
பூனைக்கெங்கே தெரியும்,
வானத்தின் முகடெங்கும்
விழிகள் முளைத்திருப்பது?

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக