-ந.மயூரரூபன்
மரணப் பொறிகள்
கடலோரம் படுத்திருக்க
சாவின் வாய்ப்புகள்
சற்றே விலகப்போன கணத்தில்
உயிர் சிந்தச் சிந்த
விழுந்து போனோம்.
உறவுகள் இறைந்துபோன
எம்நிலத்தில்
நிலக்கண்ணிப் பொறிகளும்
ஊனுறுஞ்சும் கங்குல்களும்
தம் பொழுதுகளை
விழுத்தியிருக்க
மீண்டு்ம் எழுந்துகொள்கிறோம்...
வியக்காதிருங்கள் சோதரரே!
29092010

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக