ஞாயிறு, 5 செப்டம்பர், 2010

வலி

-ந.மயூரரூபன்


ஓடிக்கொண்டிருக்கும்
காற்றின் கருக்குகளில்
குந்தியிருக்கிறதுன் மனது.

 

குஞ்சுறை விழுத்திய

கிளைமையற்ற

முள்மறை முக்காடு
மூடித்தங்குகிறதுன்
சைனியத்துள்.

அறுந்துவிழுமொவ்வொரு
சினைகளிலுந் தொங்கி

அந்தரிக்கிறேன் நான்.



24052010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக