சனி, 11 செப்டம்பர், 2010

..................................


-ந.மயூரரூபன்



என்னை மூடிச்
சேர்ந்துபோன இலைகளெல்லாம்
உயிர் வரண்டுபோய்
என்மீது மோதுகின்றன.

உன்னினைவில் நனைந்து
வரளாதிருக்கும் என்னுயிர்
அந்தச் சருகுகளுடன்
இன்றும் உன்னைப்பற்றியே
பேசிக்கொண்டிருக்கிறேன்.

மகனே!
காயா நினைப்பெல்லாம்
உன்னால் அலைவுறும்
காற்றுக்குத் தெரியுமென
காத்திருக்கிறேன்.

மூவாறு மாதங்கள்
உன்மூச்சு உலவுமிடமறியாது
சித்தமழிந்து
கிழி சீலையானேன்.

என் கொள்ளிக்குடமுடைப்பான்
என்மகன்.
உயிர் வேகுந்தீ
மூண்டுவிட்டதடா.
நான் பேசிக்கொள்ளும்
சருகுகளெல்லாம்
சிந்தையுறைந்து
எரிகின்றன.

உயிர்மூட்டிய நெருப்பில்
உனக்காய்ச் சுருண்டிருக்கிறேன்
மகனே...


11092010

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக