சனி, 7 ஆகஸ்ட், 2010

பொய்



-ந.மயூரரூபன்

மெய்யற்ற தளிர்கள்
பசுமையைப் பறித்தெடுக்கின்றன.
உன்னைச்சூழப் படரும் வெம்மை
உண்மையற்றதென உன்னினைப்பு.

வருங் கணங்களிலெலாம்
மெய்யழிந்த சிறுதுளிர்களைக்
கொழுவி விடுகிறாய்.

தின்னப்பட்ட
உன்னிழல்களின் சுவடுகள்
மறைந்துவிட்ட பொழுதுகளில்
மெய்மறைந்த
நிழல்கள் கறுக்கின்றன.

ஆற அமருவோர் யாருமின்றி
நீயமிழ்ந்திருக்கும்
பொய்வெளியே எங்கும்
சத்தமின்றிப் படருகின்றது.

சுற்றித் துளிர்க்கும்
உன் மெய்யுருவிய பொய்களால்
ஒளி நுளையும் பொட்டுக்கள்
கரையும் பொழுதுகளில்
சத்தமின்றி உன்னைத் தின்கிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக